தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த நடிகர் விஜய், தற்போது அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். வரவிருக்கும் தேர்தலில் அவர் தனியாக போட்டியிடப் போகிறாரா அல்லது கூட்டணி அமைக்கப் போகிறாரா என்பது தற்போது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் அதிகமாக பேசப்படும் விஷயமாக உள்ளது.
இந்த நிலையில், கரூர் துயர சம்பவம் தொடர்பான விசாரணைக்காக இன்று நடிகர் விஜய் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினார். இந்த செய்தி வெளியானதும் அவரது ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனம் பெற்றது.
இதற்கிடையில் மாலை நேரத்தில் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தேர்தல் தேதியை அறிவித்தது. அதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளும் உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் சிபிஐ அலுவலகத்திலிருந்து வெளியே வந்த விஜய், தனது காரின் சன்ரூஃப் வழியாக எழுந்து நின்று வெளியே காத்திருந்த ரசிகர்களுக்கு கையை அசைத்து வாழ்த்து தெரிவித்தார். அந்த காட்சி அங்கிருந்தவர்களால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
முன்னதாக தனது அரசியல் பிரச்சாரத்திற்கு திமுக அரசு பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருவதாகவும், அனுமதி வழங்க மறுப்பதாகவும் விஜய் கட்சியினர் குற்றம்சாட்டி வந்தனர். ஆனால் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், இனி தேர்தல் ஆணையத்தின் மூலம் அவரது பிரச்சாரத்திற்கு அனுமதி எளிதாக கிடைக்கும் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இதனால் விரைவில் நடிகர் விஜய் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது அரசியல் வட்டாரத்திலும் ரசிகர்களிடையிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



